Translate

Monday 5 May 2014

நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவம் - Diabetes Siddha Medicine

நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவம் - Diabetes Siddha Medicine



நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவம் - Diabetes Siddha Medicine

இன்று உலகை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோய் உள்ளது. இந்நோய்க்கு ஆங்கில மருத்துவ முறையினில் முழுமையாக குணப்படுத்தும் மருந்துகள் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

சர்க்கரை நோயினால் உடலின் மிக முக்கியமான உறுப்புகளான கண்கள், இருதயம்,சிறுநீரகம்,நரம்பு மண்டலம் [ஆண்மைக் குறைவு] மற்றும் கால்கள் போன்றவைகள் மிக விரைவில் பாதிப்படைகின்றது. 

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சித்த மருந்து செய்முறை :

1 - கருந்துளசி இலை பொடி - 300 கிராம் 
2 - நித்யகல்யாணி இலை பொடி - 200 கிராம் 
3 - சிறியாநங்கை இலை பொடி - 100 கிராம் 
4 - நெல்லிக்காய் பொடி - 100 கிராம் 
5 - மஞ்சள் தூள் - 50 கிராம் 
இவைகளை ஒன்றாய் கலந்து கொண்டு தினமும் காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு தம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வர சிறுநீரிலும், இரத்தத்திலும் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து கட்டுக்குள் வரும்.

[ இம் மருந்து கைகண்ட அனுபவ முறையாகும் ]


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி -T.N
Cell : 9865430235 - 9095590855

Thursday 13 February 2014

இரத்த மூலம், பெரும்பாடு , சீத பேதி குணமாக்கும் மாம்பருப்பு மருத்துவம் - Bleeding Piles, Dysentery

இரத்த மூலம்பெரும்பாடு , சீதபேதி குணமாக்கும் மாம்பருப்பு மருத்துவம் 






உணவே மருந்து,மருந்தே உணவு என்னும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது நமது தமிழ் மருத்துவம். அவ்வகையில் நாம் உண்ணும் உணவுப் பொருள்களில் நோய்களைப் போக்கும் அரிய குணங்கள் அடங்கியுள்ளன.

உண்ணத் தெரிந்தவனுக்கு  நோயில்லை என்பது சித்தர் வாக்காகும்.நாம் உண்ணும் உணவுப் பொருள்களின் தன்மைகளை அறிந்து உண்டால் நோய்களே வராமல் ஆரோக்கியமாக வாழலாம்.இதற்கான சூத்திரங்களை சித்தர்கள் அற்புதமாக வடிவமைத்துள்ளனர்.இதனை மக்கள் எளிமையாய் புரிந்துகொண்டு பயன் பெரும் வகையில் சித்தர் பிரபஞ்சம் இணையதளம் அரிய விளக்கங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது.

முக்கனிகள் எனப்போற்றப்படும் மா,பலா,வாழை இதில் முதல் இடத்தில் உள்ளது மா எனப்படும் மாம்பழம் ஆகும்.அனைத்து பழங்களின் சுவைகளி லும் விஞ்சி நிற்பது இதுவே ஆகும். இது சுவைகளில் மட்டுமல்ல வேதனை தரும் நோய்களை போக்கும் அரிய குணமும் இதற்குண்டு.

வெயில் காலங்களில் வரும் மாம்பழ சீசனில் மாம்பழத்தை உண்டுவிட்டு கொட்டையை தூர எரிந்து விடுவோம்.ஆனால் அந்த கொட்டயில் உள்ள பருப்பில் அற்புதமான  மருத்துவ குணம் அடங்கி உள்ளது.


பெரும்பாடு , அதிக உதிரப்போக்கு குணமாக ;
மாங்கொட்டயின் உட்பருப்பை எடுத்து உலர்த்தி இடித்து தூள்  செய்து ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து ஒரு வாரம் தினசரி உண்டால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் தோன்றக்க்கூடிய அதிக உதிரப்போக்கு மற்றும் வயிற்றுவலி குணமாகும் .  


சீதபேதி,வயிற்றோட்டம் குணமாக  - Dysentery, Diarrhea  
மாம்பருப்பு, கசகசா, சுக்கு, ஓமம் இந்த நான்கும் 2-கிராம் அளவு எடுத்து எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்து ஒரு தம்ளர் அளவு மோரில் கலந்து உண்ண இரண்டு வேளையில் சீதபேதி, வயிற்றோட்டம் குணமாகும்.


இரத்த மூலம் குணமாக - Bleeding Piles
மாங்கொட்டயின் உட்பருப்பை எடுத்து உலர்த்தி இடித்து தூள்  செய்து அரை டீஸ்பூன் அளவு எடுத்து 50 -மிலி தயிரில் கலந்து உண்ணவும்.இது போல் காலை,மாலை இரண்டு வேளை உண்ண  மூன்று அல்லது ஐந்து நாட்களில் இரத்த மூலம் குணமாகும்.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி -5 - T.N
cell : 9865430235 - 9095590855




Monday 3 February 2014

குழந்தை பிறக்கும் நாள் கணிக்கும் முறை - Natural Child Birth Date

குழந்தை பிறக்கும் நாள் கணிக்கும் முறை - Natural Child Birth Date  







குழந்தை பிறக்கும் நாள் கணிக்கும் முறை - Natural Child Birth Date  
                                                                        
பொதுவாக பெண்களுக்கு கர்ப்பம் தரித்தவுடன் குழந்தை எப்போது பிறக்கும் என்பதை அறிந்து கொள்ள அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். இதற்காக மருத்துவர்களை நாடும் போது அவர்கள் பொதுவாக கர்ப்ப கால கணக்கில் குறிப்பிட்டுள்ள முறைப்படி குழந்தை பிறக்கும் நாளை கணித்துக் கூறுவார்கள்.

இன்றைய காலத்தில் இந்த கர்ப்பகால கணக்கும் அதில் உள்ள சூட்சுமம்   அனைவரும் அறியாததால் இயற்கையான பிரசவம் என்ற நிலை மாறி சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சையில் குழந்தை பிறக்கும் நிலையும் அதன் சதவிகிதமும் அதிகரித்து வருகின்றது. 

கருத்தரிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கருப்பையில் குழந்தையின் வளர்ச்சி முதிர்வடைந்தவுடன் இயற்கையாக பிறக்க வேண்டும் என்பதுதான் மனித உடலின் அமைப்பாகும். ஆனால் இன்றைய அறிவியல் உலகின் மருத்துவ முறையின் மருத்துவர்கள் சிலரால் அறுவை சிகிச்சை என்னும் நிலைக்கு ஆளாகின்றனர்.

கர்ப்பகால கணக்கில்  கூறப்படும் 40 -வாரம் [ 280 -நாட்கள் ] என்பது பொதுவானதாகும்.இதில் ஆண் குழந்தையாக இருந்தால் முன்பே பிறந்து விடும்.பெண் குழந்தையாக இருந்தால் இந்த கணக்கில் கூறப்படும் நாட்களுக்குப் பின்புதான் பிறக்கும்.ஆனால் மருத்துவர்கள் நாட்களை முன், பின்னாக கணித்து சிசேரியன் என்னும் அறுவை சிகிச்சை வரை கொண்டு செல்கின்றனர்.எனவே மேலே இதனை கணிக்கும் முறையை தனியே பதிவு செய்துள்ள விபரங்களை கவனமாக படித்து கர்ப்பகால கணக்கை கணித்து அந்த நாள் வரை காத்திருங்கள்.

நாட்கள் தாமதம் ஆனாலும் பயம்,கவலை அடைய வேண்டாம்.
இயற்கையான பிரசவ வலி வந்து சுகப்பிரசவம் [Normal Delivery ]  ஆகும்.  

நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி - 5  T.N
cell : 9865430235 - 8695455549







Friday 17 January 2014

தாய்ப்பால் சுரக்கச்செய்யும் அற்புத மூலிகை - அம்மான் பச்சரிசி - மரு உதிர - Skin Tags

தாய்ப்பால் சுரக்கச்செய்யும் அற்புத மூலிகை - அம்மான் பச்சரிசி - மரு உதிர - Skin Tags








அம்மான் பச்சரிசி மூலிகை


தாய்ப்பால் சுரக்கச்செய்யும் அற்புத மூலிகை - அம்மான் பச்சரிசி  

பிறந்த குழந்தைக்கு உணவாகவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டதுதான் தாய்ப்பால் ஆகும்.இன்றைய உணவு முறை மாற்றங்களினால் பெண்களில் பலருக்கு குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சரிவர சுரப்பதில்லை.

தாய்ப்பால் பெருகச்செய்யும் அற்புத மூலிகைதான் அம்மான் பச்சரிசி ஆகும்.இது நீர்ப்பாங்கான இடங்களில் அதிகம் காணும். இதனை பறித்து வந்து நீரில் கழுவி சுத்தம் செய்து இலைகள், தண்டுடன் அம்மியில் அல்லது மிக்சியில் அரைத்து ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து 200 -மிலி பசும்பாலுடன் கலந்து சாப்பிடவும்.

இது போல் காலை மாலை என இரண்டு வேலை சாப்பிடவும். தொடர்ந்து ஒரு வார காலம் உண்ண தாய்ப்பால் அபாரமாய் சுரக்கும்.



மரு உதிர - Skin Tags

இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது மரு [Skin Tag] ஆகும்.இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம்.அதற்கும் உதவுவது மேற்கூறிய அம்மான் பச்சரிசி ஆகும்.

அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால் பால் தோன்றும்.இதனை மரு மீது பூசவும்.மேலும் சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்.இது போல் தினமும் பூசி வர நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி -T.N
cell : 9865430235 - 8695455549




Thursday 16 January 2014

சித்த மருத்துவ முறையின் மகத்துவம் - 1 Greatness of Siddha Medicine

சித்த மருத்துவ முறையின் மகத்துவம்  - 1 





சித்த மருத்துவ முறையினை உலக அரங்கில் பறைசாற்றிய, மறைந்த மருத்துவ மேதை தெய்வநாயகம் ஐயாவின் உரை 


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி - T.N
www.siddharprapnajam.org
siddharprapanjam@gmail.com
cell :  09865430235 - 8695455549

Monday 13 January 2014

ஆண்மைக்குறைவு போக்கும் அற்புத சித்த மருந்துகள் - Infertility

ஆண்மைக்குறைவு போக்கும் அற்புத சித்த மருந்துகள்



ஆண்மைக்குறைவு போக்கும் அற்புத சித்த மருந்துகள்


1- நிலப்பனங்கிழங்கு
2- தண்ணீர் விட்டான் கிழங்கு
3- இலவம் பிசின்
4- நெருஞ்சில் விதை
5- நீர்முள்ளி விதை
6- பெரும் பூனைக்காலி விதை
7- பனங்கற்கண்டு

இந்த 7 –ம் சமஎடை அளவு எடுத்து இடித்து சூரணம் செய்து கொள்ளவும்.
இதில் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து 2௦௦ மிலி பசும்பாலில் போட்டு காய்ச்சி இரவில் உணவிற்குப் பின் சாப்பிடவும்.

இது போல் தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட விந்து அணுக்கள் பெருகும். ஆண்மை அதிகரிக்கும்.

குறிப்பு :-
மேற்கண்ட மருந்துகள் அனைத்தும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் – திருச்சி - 5  -T.N
cell : 09865430235 - 08695455549

Saturday 11 January 2014

பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என அறிந்து கொள்ளும் சூட்சுமம்

பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என அறிந்து கொள்ளும் சூட்சுமம்

திருமணமாகிய அனைவருக்கும் முதன் முதலில் கருத்தரித்தவுடன் பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என அறிந்து கொள்ள மிகுந்த ஆர்வமும், விருப்பமும் இருக்கும்.

கரு தரித்த பெண்ணின் உடல் அமைப்புகள் மற்றும் சில அறிகுறிகள் மூலமாக கருவில் உள்ளது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என மிகவும் சுலபமாக அறிந்து கொள்ளலாம். 

சித்த மருத்துவ முறையினில் உள்ள இந்த சூட்சும விளக்கங்கள் மூலமாக பாரம்பரிய சித்த மருத்துவர்களும்,கிராமப் புறங்களில் உள்ள வயதான பெரியோர்களும் மிகவும் துல்லியமாக கணித்துக் கூறியுள்ளனர்.இக் கணிப்பு மிகவும் சரியாகவே இருந்துள்ளது.
  










நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர்  வேதா குருகுலம் – திருச்சி – 5  -T.N
siddharprapanjam@gmail.com
cell : 09865430235 – 08695455549