தாய்ப்பால் சுரக்கச்செய்யும் அற்புத மூலிகை - அம்மான் பச்சரிசி - மரு உதிர - Skin Tags
அம்மான் பச்சரிசி மூலிகை
தாய்ப்பால் சுரக்கச்செய்யும் அற்புத மூலிகை - அம்மான்
பச்சரிசி
பிறந்த குழந்தைக்கு உணவாகவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல்
கொண்டதுதான் தாய்ப்பால் ஆகும்.இன்றைய உணவு முறை மாற்றங்களினால்
பெண்களில் பலருக்கு குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால்
சரிவர சுரப்பதில்லை.
தாய்ப்பால் பெருகச்செய்யும் அற்புத மூலிகைதான் அம்மான் பச்சரிசி ஆகும்.இது
நீர்ப்பாங்கான இடங்களில் அதிகம் காணும். இதனை பறித்து வந்து நீரில் கழுவி சுத்தம் செய்து இலைகள், தண்டுடன் அம்மியில் அல்லது மிக்சியில் அரைத்து ஒரு பெரிய எலுமிச்சை அளவு
எடுத்து 200 -மிலி பசும்பாலுடன் கலந்து சாப்பிடவும்.
இது போல் காலை மாலை என இரண்டு வேலை சாப்பிடவும். தொடர்ந்து ஒரு வார காலம் உண்ண
தாய்ப்பால் அபாரமாய் சுரக்கும்.
மரு உதிர - Skin Tags
இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது மரு [Skin Tag] ஆகும்.இதனை சுலபமாக உடலில் இருந்து
அகற்றலாம்.அதற்கும் உதவுவது மேற்கூறிய அம்மான் பச்சரிசி ஆகும்.
அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால் பால் தோன்றும்.இதனை மரு மீது
பூசவும்.மேலும் சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்.இது போல் தினமும் பூசி வர
நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.
நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி -T.N
cell : 9865430235 - 8695455549
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.