Translate

Friday 17 January 2014

தாய்ப்பால் சுரக்கச்செய்யும் அற்புத மூலிகை - அம்மான் பச்சரிசி - மரு உதிர - Skin Tags

தாய்ப்பால் சுரக்கச்செய்யும் அற்புத மூலிகை - அம்மான் பச்சரிசி - மரு உதிர - Skin Tags








அம்மான் பச்சரிசி மூலிகை


தாய்ப்பால் சுரக்கச்செய்யும் அற்புத மூலிகை - அம்மான் பச்சரிசி  

பிறந்த குழந்தைக்கு உணவாகவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டதுதான் தாய்ப்பால் ஆகும்.இன்றைய உணவு முறை மாற்றங்களினால் பெண்களில் பலருக்கு குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சரிவர சுரப்பதில்லை.

தாய்ப்பால் பெருகச்செய்யும் அற்புத மூலிகைதான் அம்மான் பச்சரிசி ஆகும்.இது நீர்ப்பாங்கான இடங்களில் அதிகம் காணும். இதனை பறித்து வந்து நீரில் கழுவி சுத்தம் செய்து இலைகள், தண்டுடன் அம்மியில் அல்லது மிக்சியில் அரைத்து ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து 200 -மிலி பசும்பாலுடன் கலந்து சாப்பிடவும்.

இது போல் காலை மாலை என இரண்டு வேலை சாப்பிடவும். தொடர்ந்து ஒரு வார காலம் உண்ண தாய்ப்பால் அபாரமாய் சுரக்கும்.



மரு உதிர - Skin Tags

இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது மரு [Skin Tag] ஆகும்.இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம்.அதற்கும் உதவுவது மேற்கூறிய அம்மான் பச்சரிசி ஆகும்.

அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால் பால் தோன்றும்.இதனை மரு மீது பூசவும்.மேலும் சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்.இது போல் தினமும் பூசி வர நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி -T.N
cell : 9865430235 - 8695455549




Thursday 16 January 2014

சித்த மருத்துவ முறையின் மகத்துவம் - 1 Greatness of Siddha Medicine

சித்த மருத்துவ முறையின் மகத்துவம்  - 1 





சித்த மருத்துவ முறையினை உலக அரங்கில் பறைசாற்றிய, மறைந்த மருத்துவ மேதை தெய்வநாயகம் ஐயாவின் உரை 


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி - T.N
www.siddharprapnajam.org
siddharprapanjam@gmail.com
cell :  09865430235 - 8695455549

Monday 13 January 2014

ஆண்மைக்குறைவு போக்கும் அற்புத சித்த மருந்துகள் - Infertility

ஆண்மைக்குறைவு போக்கும் அற்புத சித்த மருந்துகள்



ஆண்மைக்குறைவு போக்கும் அற்புத சித்த மருந்துகள்


1- நிலப்பனங்கிழங்கு
2- தண்ணீர் விட்டான் கிழங்கு
3- இலவம் பிசின்
4- நெருஞ்சில் விதை
5- நீர்முள்ளி விதை
6- பெரும் பூனைக்காலி விதை
7- பனங்கற்கண்டு

இந்த 7 –ம் சமஎடை அளவு எடுத்து இடித்து சூரணம் செய்து கொள்ளவும்.
இதில் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து 2௦௦ மிலி பசும்பாலில் போட்டு காய்ச்சி இரவில் உணவிற்குப் பின் சாப்பிடவும்.

இது போல் தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட விந்து அணுக்கள் பெருகும். ஆண்மை அதிகரிக்கும்.

குறிப்பு :-
மேற்கண்ட மருந்துகள் அனைத்தும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் – திருச்சி - 5  -T.N
cell : 09865430235 - 08695455549

Saturday 11 January 2014

பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என அறிந்து கொள்ளும் சூட்சுமம்

பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என அறிந்து கொள்ளும் சூட்சுமம்

திருமணமாகிய அனைவருக்கும் முதன் முதலில் கருத்தரித்தவுடன் பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என அறிந்து கொள்ள மிகுந்த ஆர்வமும், விருப்பமும் இருக்கும்.

கரு தரித்த பெண்ணின் உடல் அமைப்புகள் மற்றும் சில அறிகுறிகள் மூலமாக கருவில் உள்ளது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என மிகவும் சுலபமாக அறிந்து கொள்ளலாம். 

சித்த மருத்துவ முறையினில் உள்ள இந்த சூட்சும விளக்கங்கள் மூலமாக பாரம்பரிய சித்த மருத்துவர்களும்,கிராமப் புறங்களில் உள்ள வயதான பெரியோர்களும் மிகவும் துல்லியமாக கணித்துக் கூறியுள்ளனர்.இக் கணிப்பு மிகவும் சரியாகவே இருந்துள்ளது.
  










நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர்  வேதா குருகுலம் – திருச்சி – 5  -T.N
siddharprapanjam@gmail.com
cell : 09865430235 – 08695455549